போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் | ஆந்தாலஜி கதையில் உருவாகும் 'வவ்வல்ஸ்' | 40 படங்களில் போலீசாக நடித்த சமுத்திரக்கனி | விதார்த்தின் புதிய படம் 'தொடக்கம்' | பிளாஷ்பேக்: சிரஞ்சீவிக்கு கொடுத்த வாக்கை 9 வருடங்களுக்கு பிறகு காப்பாற்றிய பாரதிராஜா | ஏஆர் ரஹ்மானின் தெலுங்கு 'பெத்தி' பாடல் புதிய சாதனை | பிளாஷ்பேக்: கடன் பற்றி எச்சரித்த முதல் படம் |

செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர் டைட்டில் ரோலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கர்ப்பமாக இருக்கும் திவ்யாவுக்கு அண்மையில் அவர் நடித்த, நடித்து வரும் சீரியல் பிரபலங்கள் சேர்ந்து வளைகாப்பு நடத்தினர். அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க போவதால் அவர் செவ்வந்தி தொடரில் இனி தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திவ்யா ஸ்ரீதர் செவ்வந்தி சீரியலை விட்டு விலகுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அவருக்கு பதில் அபியும் நானும் சீரியலில் வாத்தி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ரம்யா கவுடா இனி செவ்வந்தி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல் ரம்யாவும் தனது இண்ஸ்டாகிராமில் சன் டிவியில் தான் மீண்டும் நடிக்க இருப்பதை புகைப்படங்கள் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.




