விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர் டைட்டில் ரோலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கர்ப்பமாக இருக்கும் திவ்யாவுக்கு அண்மையில் அவர் நடித்த, நடித்து வரும் சீரியல் பிரபலங்கள் சேர்ந்து வளைகாப்பு நடத்தினர். அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க போவதால் அவர் செவ்வந்தி தொடரில் இனி தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திவ்யா ஸ்ரீதர் செவ்வந்தி சீரியலை விட்டு விலகுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அவருக்கு பதில் அபியும் நானும் சீரியலில் வாத்தி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ரம்யா கவுடா இனி செவ்வந்தி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல் ரம்யாவும் தனது இண்ஸ்டாகிராமில் சன் டிவியில் தான் மீண்டும் நடிக்க இருப்பதை புகைப்படங்கள் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.