நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
நடிகர் விமல் தனது மனைவி பிரியதர்ஷினி மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திருச்செந்தூர் முருகன் தரிசனம் நீண்ட நாள் கனவு. அதனால் குடும்பத்துடன் வந்தேன். எனது சினிமா கேரியர் சீராக போய்கொண்டிருக்கிறது. மா.பொ.சி படத்தில் நடித்து வருகிறேன். அடுத்து முழுநீள காமெடி படம் ஒன்றிலும் நடித்து வருகிறேன். ரசிகர்களுக்கு பிடித்தமான கதைகளை தேடி நடிக்கிறேன். விலங்கு வெப் தொடர் பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்றார்.
விமலுக்கு உள்ள பைனான்ஸ் பிரச்னை, வழக்கு இதுகுறித்த கேள்விகளுக்கு “எல்லாவற்றையும் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான்” என்று பதிலளித்து சென்றார்.