என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகர் விமல் தனது மனைவி பிரியதர்ஷினி மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திருச்செந்தூர் முருகன் தரிசனம் நீண்ட நாள் கனவு. அதனால் குடும்பத்துடன் வந்தேன். எனது சினிமா கேரியர் சீராக போய்கொண்டிருக்கிறது. மா.பொ.சி படத்தில் நடித்து வருகிறேன். அடுத்து முழுநீள காமெடி படம் ஒன்றிலும் நடித்து வருகிறேன். ரசிகர்களுக்கு பிடித்தமான கதைகளை தேடி நடிக்கிறேன். விலங்கு வெப் தொடர் பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்றார்.
விமலுக்கு உள்ள பைனான்ஸ் பிரச்னை, வழக்கு இதுகுறித்த கேள்விகளுக்கு “எல்லாவற்றையும் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான்” என்று பதிலளித்து சென்றார்.