டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

2012ம் ஆண்டு வெளிவந்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அதன் பிறகு சில பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் “மனிதன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன்” ஆகிய படங்கள் மட்டும்தான் குறிப்பிடத்தக்க விமர்சனங்களைப் பெற்ற படங்களாக அமைந்தது. மற்ற படங்கள் குறிப்பிடத்தக்க வரவேற்பைக் கூடப் பெறவில்லை.
உதயநிதி தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரான பின் வெளிவரும் படமாக நாளை(மார்ச் 17) வெளியாக உள்ள 'கண்ணை நம்பாதே' படம் இடம் பெற உள்ளது. இப்படத்தைக் கடந்த நான்கு ஆண்டுகளாக தயாரித்து வந்தனர். இப்படம் ஆரம்பமாகும் போது திமுக இளைஞரணி செயலாளராக மட்டுமே இருந்த உதயநிதி அதன்பின் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகி, இப்படம் வெளியாகும் போது அமைச்சராகவும் ஆகிவிட்டார்.
ஒரு கிரைம் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் உதயநிதியுடன் பிரசன்னா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்திற்காக கடந்த ஒரு வாரமாக பல பேட்டிகளிலும் பங்கேற்றார். இந்தப் படத்தை அடுத்து உதயநிதி நடித்துள்ள கடைசி படமான 'மாமன்னன்' படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.