Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜூனியர் என்டிஆர் படத்தில் பிரியங்கா சோப்ரா? | பதிரனாவுடன் காதலா? விளக்கமளித்த பாக்கியலெட்சுமி நடிகை | யாஷிகாவுடன் காதலா? - வெறும் புரொமோஷன் தாங்க என்கிறார் ரிச்சர்ட் ரிஷி | பொய் புகார் : பிரான்ஸ் பெண் மீது அறம் இயக்குனர் புகார் | போதையில் நடிகர் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு | காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் | நேஹா சக்சேனாவும் பரபரப்பு வளையத்தில் சிக்குவாரா? | இறுதிக்கட்டத்தை எட்டிய அர்ஜுன் - நிக்கி கல்ராணியின் மலையாள படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தொகுப்பாளரின் ஜோக்குகளுக்கு முன்கூட்டியே கடிவாளம் போட்ட ஆஸ்கார் விருதுக்குழு

15 மார், 2023 - 13:34 IST
எழுத்தின் அளவு:
The-Oscars-team-preemptively-reined-in-the-host-jokes

சமீபத்தில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று முடிந்துள்ளது. ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என இந்தியாவை சேர்ந்த இரண்டு படங்கள் ஆஸ்கர் விருது பெற்றதை இந்திய ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிகழ்வில் ஆர்ஆர்ஆர் படத்தை பாலிவுட் படம் என மேடையில் குறிப்பிட்டதற்காக தெலுங்கு ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்போது நகைச்சுவை என்கிற பெயரில் யாரையும் புண்படுத்தி விடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு அவர் தயார் செய்து வைத்திருந்த சில ஜோக்குகளுக்கு முன்கூட்டியே கடிவாளமும் போடப்பட்டதாக இந்த விழா ஏற்பாட்டினை கவனித்துக் கொண்ட தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த வருடம் ஆஸ்கர் விருது வழங்கும்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நகைச்சுவை நடிகர் கிரிஸ் ராக் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மனைவியை பற்றி நகைச்சுவையாக பேசுவதாக நினைத்துக்கொண்டு உருவ கேலி செய்தார். இதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றிய வில் ஸ்மித் அனைவர் முன்னிலையிலும் கிரிஷ் ராக்கை கன்னத்தில் அறைந்த நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விருது வழங்கும் விழா முடிந்த பின்னரும் கூட பல நாட்கள் இது பற்றி உலகெங்கிலும் பேசப்பட்டது. இந்தமுறை இது போன்ற சங்கடம் தரும் நிகழ்வுகள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஆஸ்கர் விருது விழா ஒருங்கிணைப்பு குழுவினர் முன்கூட்டியே ஜிம்மி கிம்மலிடம் இதுகுறித்து எச்சரிக்கை செய்துவிட்டனர்.

இதுகுறித்து விழா மேடையில் ஜிம்மி கிம்மல் பேசும்போது கூட இங்கே யாராவது ஒருவர் எந்த நேரத்திலாவது வன்முறை காட்ட நினைத்தால் அவருக்கும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்படும். மேலும் 19 நிமிடம் நீண்ட உரையாற்றவும் அனுமதிக்கப்படும் என்றும் கிண்டலுடன் குறிப்பிட்டார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எங்களுக்குள் போட்டியில்லை - சுபிக்ஷாஎங்களுக்குள் போட்டியில்லை - சுபிக்ஷா ஆஸ்கர் விருதுக்கு பின் சுற்றுலாத்தலமாக மாறிய தெப்பக்காடு ஆஸ்கர் விருதுக்கு பின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in