ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

2023 - 2026ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வருகிற மார்ச் 26ம் தேதி நடக்க இருக்கிறது. இதனை இரண்டு முன்னாள் நீதிபதிகள் தேர்தல் அதிகாரிகளாக இருந்து நடத்த இருக்கிறார்கள். இதில் தற்போது பொறுப்பில் இருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியினர் போட்டியிடுகிறார்கள். தற்போது இந்த அணியில் இருந்து விலகிய சிலர் தற்போதைய செயலாளர் மன்னன் தலைமையில் 'உரிமை காக்கும் அணி' என்ற பெயரில் புதிய அணி ஒன்றை தொடங்கி உள்ளனர்.
இதில் மன்னனுடன், கமீலா நாசர், பி.எல்.தேனப்பன், கே.எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். 300 தயாரிப்பாளர்களுக்கு மேல் இந்த அணியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அணியின் ஆலோசனை கூட்டம் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. விரைவில் யார் யார் எந்தெந்த பதவிக்கு போட்டியிடுகிறார்கள் என்பதை அறிவிக்க இருக்கிறார்கள்.