பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

2023 - 2026ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வருகிற மார்ச் 26ம் தேதி நடக்க இருக்கிறது. இதனை இரண்டு முன்னாள் நீதிபதிகள் தேர்தல் அதிகாரிகளாக இருந்து நடத்த இருக்கிறார்கள். இதில் தற்போது பொறுப்பில் இருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியினர் போட்டியிடுகிறார்கள். தற்போது இந்த அணியில் இருந்து விலகிய சிலர் தற்போதைய செயலாளர் மன்னன் தலைமையில் 'உரிமை காக்கும் அணி' என்ற பெயரில் புதிய அணி ஒன்றை தொடங்கி உள்ளனர்.
இதில் மன்னனுடன், கமீலா நாசர், பி.எல்.தேனப்பன், கே.எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். 300 தயாரிப்பாளர்களுக்கு மேல் இந்த அணியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அணியின் ஆலோசனை கூட்டம் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. விரைவில் யார் யார் எந்தெந்த பதவிக்கு போட்டியிடுகிறார்கள் என்பதை அறிவிக்க இருக்கிறார்கள்.