ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நாளை மார்ச் 12ம் தேதி இரவு 8 மணிக்கு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி திங்கள் கிழமை காலை நேரமாக இருக்கும்.
இந்த விருதுகளில் சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் தெலுங்குத் திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் தேர்வாகியுள்ளது. அப்பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என தெலுங்குத் திரையுலகத்தினர் மட்டுமல்ல மற்ற திரையுலகினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அடுத்து சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் 'செல்லோ ஷோ' படமும், சிறந்த டாகுமென்டரி திரைப்படப் பிரிவில் 'ஆர் தட் ப்ரீத்ஸ்' படமும், சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் 'த எலிபன்ட் விஸ்பரர்ஸ்' படமும் தேர்வாகியுள்ளது.
இந்த நான்கு விருதுகளுக்கான போட்டியில் எந்த இந்தியப் படம் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமையைத் தேடித் தரப் போகிறது என அனைத்திந்திய சினிமா ரசிகர்களின் கண்களும் ஆஸ்கர் விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறது.