துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் இந்தியன் 2 மற்றும் அயலான் படங்களில் நடிக்கிறார். அதேசமயம் ஹிந்தியில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛தென்னிந்திய படங்கள் ஹிந்தி சேனல்களில் கொண்டாடப்படுகிறது. ஹிந்தி மற்றும் பிராந்திய மொழி படங்கள் இந்திய சினிமாவின் ஒருபகுதியே. இரண்டையும் ஒப்பிட வேண்டாம். ஒரு படம் நன்றாக இருந்தால், அதுவே பார்வையாளர்களைக் கண்டுபிடிக்கும். சமூக வலைதளங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருப்பதால் அதுபற்றி விவாதங்கள் நடக்கின்றன. நம்மிடம் நல்ல கதை, கலைஞர்கள், படைப்பாளிகள் உள்ளனர். இதன்மூலம் சர்வதேச திரைப்படங்களை உருவாக்க முடியும்'' என்கிறார்.