போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்த காடு நல்ல விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றி பெறவில்லை. தற்போது சிம்புவின் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள திரைப்படம் பத்து தல. இப்படம் வரும் மார்ச் 30 அன்று வெளியாகிறது. சிம்புவின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ், மிஷ்கின் உள்ளிட்டோர்களின் பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில் இப்போது சிம்புவின் அடுத்த படத்தை ‛கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இவரின் ரஜினி படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இப்போது சிம்பு படத்தை இயக்குவது நடக்கும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.