கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி | மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி | மீசைய முறுக்கு 2 டீசருக்கு வரவேற்பு | அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...? | வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் | பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு | சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி… | 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்' | 4 இடியட்ஸ் : ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை | யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு |

மலையாள திரையுலகில் நேரம், பிரேமம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கோல்டு உள்ளிட்ட மூன்று படங்களை இயக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். மலையாள இயக்குனர் என்றாலும் அவர் சென்னையில் தான் சினிமா கற்றவர் என்பதால் தமிழ் சினிமா மீது எப்போதும் ஆர்வம் கொண்டவராகவும் இருந்து வருகிறார். குறிப்பாக ரஜினிகாந்த் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை பிரமிப்புடன் வெளிப்படுத்தவும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் வீடியோ மூலமாக பேசிய பேச்சை கேட்டுவிட்டு, “நடிகர் ரஜினிகாந்த் ஓஷோவை விட தனித்தன்மை வாய்ந்தவராக இருக்கிறார். அவரது பேச்சுக்களை கேட்கும்போது புல்லரிக்கிறது. யாரோ ஒரு சிலர் பேசினால் மட்டுமே இது போன்று ஒரு உணர்வு ஏற்படும். தற்போது அவர் ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் மட்டுமே இது போன்று பேசி வருகிறார்.
ஆனால் ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நுழைந்து தொடர்ந்து ஆக்டிவாக இதுபோன்று பயனுள்ள விஷயங்களை பேச வேண்டும். அவரது பேச்சை கேட்பதற்காக காத்திருக்கும் என்னைப் போன்ற மில்லியன், பில்லியன் ரசிகர்களின் விருப்பம் அதுதான்” என்று ரஜினிக்கு ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.




