ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

மலையாள திரையுலகில் நேரம், பிரேமம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கோல்டு உள்ளிட்ட மூன்று படங்களை இயக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். மலையாள இயக்குனர் என்றாலும் அவர் சென்னையில் தான் சினிமா கற்றவர் என்பதால் தமிழ் சினிமா மீது எப்போதும் ஆர்வம் கொண்டவராகவும் இருந்து வருகிறார். குறிப்பாக ரஜினிகாந்த் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை பிரமிப்புடன் வெளிப்படுத்தவும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் வீடியோ மூலமாக பேசிய பேச்சை கேட்டுவிட்டு, “நடிகர் ரஜினிகாந்த் ஓஷோவை விட தனித்தன்மை வாய்ந்தவராக இருக்கிறார். அவரது பேச்சுக்களை கேட்கும்போது புல்லரிக்கிறது. யாரோ ஒரு சிலர் பேசினால் மட்டுமே இது போன்று ஒரு உணர்வு ஏற்படும். தற்போது அவர் ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் மட்டுமே இது போன்று பேசி வருகிறார்.
ஆனால் ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நுழைந்து தொடர்ந்து ஆக்டிவாக இதுபோன்று பயனுள்ள விஷயங்களை பேச வேண்டும். அவரது பேச்சை கேட்பதற்காக காத்திருக்கும் என்னைப் போன்ற மில்லியன், பில்லியன் ரசிகர்களின் விருப்பம் அதுதான்” என்று ரஜினிக்கு ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.




