திருச்சி கிழக்கு வேட்பாளரா? ராஜ்யசபா எம்.பி.,யா?: நடிகர் சஞ்சீவ் பதில் | திரிஷ்யம் 3 : மோகன்லால் நெகிழ்ச்சி | ‛கேஜிஎப்-3, சலார்-2' எப்போது? -பிரசாந்த் நீல் வெளியிட்ட தகவல் | தயாரிப்பாளராகும் இயக்குனர் மாரி செல்வராஜ்! | ஜூன் 12ல் நெட்பிளிக்ஸ் வெளியாகும் சூர்யாவின் கருப்பு! | 'ராகதேவன்' உடன் ஒரு ஆனந்தமான, ஆன்மிக பயணம் : கார்த்திக் சுப்பராஜ் | ஹாலிவுட் ஹீ-மேனுக்கு குரல் கொடுக்கும் உன்னி முகுந்தன் | ஆரம்பித்தபோதே நின்றுபோன ராம்சரணின் கனவுப்படம் ; அதற்கு உயிர் கொடுத்த ‛பெத்தி' இயக்குனர் | கேரளா : முதல் நாள் வசூலில் இரண்டாம் இடம் பிடித்த 'த்ரிஷ்யம் 3' | தமிழகத்தில் 100 கோடி வசூலித்த 'கருப்பு' |

மலையாள திரையுலகில் நேரம், பிரேமம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கோல்டு உள்ளிட்ட மூன்று படங்களை இயக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். மலையாள இயக்குனர் என்றாலும் அவர் சென்னையில் தான் சினிமா கற்றவர் என்பதால் தமிழ் சினிமா மீது எப்போதும் ஆர்வம் கொண்டவராகவும் இருந்து வருகிறார். குறிப்பாக ரஜினிகாந்த் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை பிரமிப்புடன் வெளிப்படுத்தவும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் வீடியோ மூலமாக பேசிய பேச்சை கேட்டுவிட்டு, “நடிகர் ரஜினிகாந்த் ஓஷோவை விட தனித்தன்மை வாய்ந்தவராக இருக்கிறார். அவரது பேச்சுக்களை கேட்கும்போது புல்லரிக்கிறது. யாரோ ஒரு சிலர் பேசினால் மட்டுமே இது போன்று ஒரு உணர்வு ஏற்படும். தற்போது அவர் ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் மட்டுமே இது போன்று பேசி வருகிறார்.
ஆனால் ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நுழைந்து தொடர்ந்து ஆக்டிவாக இதுபோன்று பயனுள்ள விஷயங்களை பேச வேண்டும். அவரது பேச்சை கேட்பதற்காக காத்திருக்கும் என்னைப் போன்ற மில்லியன், பில்லியன் ரசிகர்களின் விருப்பம் அதுதான்” என்று ரஜினிக்கு ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.




