நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மலையாள திரையுலகில் நேரம், பிரேமம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கோல்டு உள்ளிட்ட மூன்று படங்களை இயக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். மலையாள இயக்குனர் என்றாலும் அவர் சென்னையில் தான் சினிமா கற்றவர் என்பதால் தமிழ் சினிமா மீது எப்போதும் ஆர்வம் கொண்டவராகவும் இருந்து வருகிறார். குறிப்பாக ரஜினிகாந்த் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை பிரமிப்புடன் வெளிப்படுத்தவும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் வீடியோ மூலமாக பேசிய பேச்சை கேட்டுவிட்டு, “நடிகர் ரஜினிகாந்த் ஓஷோவை விட தனித்தன்மை வாய்ந்தவராக இருக்கிறார். அவரது பேச்சுக்களை கேட்கும்போது புல்லரிக்கிறது. யாரோ ஒரு சிலர் பேசினால் மட்டுமே இது போன்று ஒரு உணர்வு ஏற்படும். தற்போது அவர் ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் மட்டுமே இது போன்று பேசி வருகிறார்.
ஆனால் ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நுழைந்து தொடர்ந்து ஆக்டிவாக இதுபோன்று பயனுள்ள விஷயங்களை பேச வேண்டும். அவரது பேச்சை கேட்பதற்காக காத்திருக்கும் என்னைப் போன்ற மில்லியன், பில்லியன் ரசிகர்களின் விருப்பம் அதுதான்” என்று ரஜினிக்கு ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.