தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சமீப காலமாக திரையுறையினர் திருப்பதி ஏழுமலையான், சபரிமலை ஐயப்பன் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 17ம் தேதி தனது 38வது பிறந்த நாளை கொண்டாடினார் சிவகார்த்திகேயன். அவரது பிறந்த நாளில் திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்நிலையில் நேற்று தனது மனைவி, குழந்தைகளுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மூலவர், சண்முகர், சத்ரு சம்ஹார மூர்த்தி சன்னதிகளில் அவர் சிறப்பு வழிபாடு செய்திருக்கிறார். இப்படி அவர் தரிசனம் செய்துவிட்டு குடும்பத்துடன் வெளியேறிக் கொண்டிருந்தபோது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் அவரைக் கண்டு முண்டியடித்துள்ளார்கள். இதன் காரணமாக கூட்ட நெரிசலில் சிவகார்த்திகேயன் சிக்கிக்கொள்ள சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அங்கு நின்ற காவல்துறையினர் கூட்டத்திலிருந்து சிவகார்த்திகேயனையும் அவரது குடும்பத்தாரையும் பாதுகாப்பாக அழைத்து வந்திருக்கிறார்கள். அதன்பிறகு அங்கு கூடிநின்ற பக்தர்களும், ரசிகர்களும், சிவகார்த்திகேயனுடன் செல்பி எடுப்பதற்கு ஆர்வம் காட்டியதால் சிறிது நேரம் ரசிகர்களின் செல்பிகளுக்கு போஸ் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
யோகிபாபு
இதேபோல் நடிகர் யோகி பாபுவும் நேற்று மகா சிவராத்திரியையொட்டி காரைக்காலில் உள்ள ஸ்ரீ தர்பானேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அங்கு கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது யோகி பாபு சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.