ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது தனது மனைவி ஜோதிகா, மற்றும் மகன், மகளுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை, தி.நகரில் பிரம்மாண்ட வீடு ஒன்றை சில வருடங்களுக்கு முன்பு கட்டி அங்குதான் பெற்றோர், தம்பி கார்த்தி ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக இருந்து வந்தார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் சூர்யா மட்டும் மும்பையில் தனிக்குட்டித்தனம் சென்றுவிட்டார் என்கிறார்கள். கடந்த வாரம் கூட அந்த மும்பை வீட்டிலிருந்து, ஜோதிகா சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரை சூர்யா சந்தித்துள்ளார். அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “மரியாதை மற்றும் அன்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யா தற்போது அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் நடைபெறும் படப்பிடிப்புக்கும் மும்பை வீட்டிலிருந்து வந்து போகிறார் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.