தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது தனது மனைவி ஜோதிகா, மற்றும் மகன், மகளுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை, தி.நகரில் பிரம்மாண்ட வீடு ஒன்றை சில வருடங்களுக்கு முன்பு கட்டி அங்குதான் பெற்றோர், தம்பி கார்த்தி ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக இருந்து வந்தார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் சூர்யா மட்டும் மும்பையில் தனிக்குட்டித்தனம் சென்றுவிட்டார் என்கிறார்கள். கடந்த வாரம் கூட அந்த மும்பை வீட்டிலிருந்து, ஜோதிகா சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரை சூர்யா சந்தித்துள்ளார். அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “மரியாதை மற்றும் அன்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யா தற்போது அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் நடைபெறும் படப்பிடிப்புக்கும் மும்பை வீட்டிலிருந்து வந்து போகிறார் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.