'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழகத்தில் தற்போது வட இந்தியர்கள் அதிக அளவில் குடியேறி வருகிறார்கள். குறைந்த சம்பளத்தில் அவர்கள் வேலை செய்வதால் எல்லா இடத்திலும் அவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். ஆனால் இதற்கு எதிராக சில அமைப்புகள் இப்போது கொடி பிடிக்கின்றன. வட இந்தியர்கள் ஆக்கிரமிப்பதால் தமிழர்கள் பிற்காலத்தில் பெரும் பிரச்சினகைளை சந்திக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள். கர்நாடகாவில், மும்பையில், கேரளாவில் பெரும் அளவில் தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்தியாவில் இந்தியவர்கள் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் இசை அமைப்பாளரும், நடிகரும், இயக்குனருமான விஜய் ஆண்டனி திடீரென இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கிறார். அதில் “வடக்கனும், கிழக்கனும், தெற்கனும், மேற்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்து ஆதரவும், எதிர்புமான கருத்துகள் வந்து கொண்டிருக்கிறது. விஜய் ஆண்டனிக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
விஜய் ஆண்டனி தற்போது 'பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்தபோது விபத்தில் சிக்கியவர் படுகாயத்துடன் உயிர் தப்பி தற்போதுதான் உடல்நலம் தேறி வருகிறார்.