ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அஸ்வின் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன்பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. 'என்ன சொல்ல போகிறாய்' என்ற படத்தில் நாயகனாக நடித்தார். இந்த படத்தின் விழாவில் '40 கதைகள் கேட்டு தூங்கிவிட்டேன்' என்று அவர் சொன்ன ஒரு வரி அவரது சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது. பலரும் அவரை கிண்டல் கேலி செய்ய வாய்ப்புகள் நின்று போனது.
அதன்பிறகு சமீபத்தில் வெளியான 'செம்பி' படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் கதையின் நாயகனாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை அருள்நிதி நடித்த 'தேஜாவு' படத்தை இயக்கிய அரவிந்த் சீனிவாசன் இயக்குகிறார். ழென் ஸ்டூடியோ சார்பில் புகழ் தயாரிக்கிறார், ஆர்கா என்டெர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.