பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் ஹீரோ ஆனவர் சரத்குமார். இவரும் நடிகை ராதிகாவும் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். தொடர்ந்து இருவருமே திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன், வாரிசு போன்ற படங்கள் திரைக்கு வந்தன. அதேபோல் ராதிகா நடிப்பில் வெந்து தணிந்தது காடு, லவ் டுடே என பல படங்கள் திரைக்கு வந்தன. இந்தநிலையில் சமீபத்தில் சரத்குமாரும் ராதிகாவும் தங்களது 22 வது திருமணநாளை கொண்டாடினார்கள். அதையடுத்து தனது இன்ஸ்டாவில் தங்களது போட்டோக்களை தொகுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் சரத்குமார்.
அதில், ‛‛22 ஆண்டுகள் அன்பு, புரிதல், ஒற்றுமை என மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த எங்கள் வாழ்வு நீண்ட பேரின்ப பயணம். வாழ்க்கையின் அனைத்து உணர்ச்சிகளையும், மகிழ்ச்சியையும், சோகத்தையும் பார்த்து இருந்தாலும் உண்மையான அர்த்தத்தை அறிய வைத்ததற்கு நன்றி. இன்று போல் என்றும் ஒன்றாகவும், அழகான குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்று சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.