ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் தனது 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா. 13 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் சரித்திர காலகட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்கள். இந்த படத்தை முடித்ததும் மார்ச் மாதத்திற்கு பிறகு வெற்றிமாறன் இருக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் முதல் கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெற்ற பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு சில மாதங்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப் போகிறாராம் வெற்றிமாறன். அதனால் அவர் இடைவெளி கொடுக்கும் அந்த இரண்டு மாதங்களில் ஏற்கனவே தன்னை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கும் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் சூர்யா. அந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் இரண்டே மாதத்தில் கேப் விடாமல் நடித்து கொடுத்துவிட்டு அதையடுத்து மீண்டும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டிருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.