ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
நடிகர் விஜய் ஆண்டனி ‛பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரது தாடை, மூக்கில் காயம் ஏற்பட்டது. இதற்காக முதலில் மலேசியாவில் சிகிச்சை பெற்றவர் பின்னர் சென்னையில் சிகிச்சை எடுத்து கொண்டார். அவருக்கு ஆபரேஷனும் நடந்தது. ஆபரேஷனுக்கு பின் உடல்நலம் தேறி வருவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், ‛‛அன்பு இதயங்களே... நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி'' என பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.