இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

நடிகர் விஜய் ஆண்டனி ‛பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரது தாடை, மூக்கில் காயம் ஏற்பட்டது. இதற்காக முதலில் மலேசியாவில் சிகிச்சை பெற்றவர் பின்னர் சென்னையில் சிகிச்சை எடுத்து கொண்டார். அவருக்கு ஆபரேஷனும் நடந்தது. ஆபரேஷனுக்கு பின் உடல்நலம் தேறி வருவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், ‛‛அன்பு இதயங்களே... நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி'' என பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.