6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி |
ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை இஷ்ரத் காதரி. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த படங்களில் பாடி இருக்கிறார், ரஹ்மானுடன் பல இசை கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது ஏ.ஆர்.ரஹ்மானின் ரிக்கார்டிங் ஸ்டூடியோக்களை நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் இஷ்ரத் தற்போது பாரதியார் எழுதிய 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி...' என்கிற பாடலை வைத்து 'எந்தையும் தாயும்' என்ற தலைப்பில் இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதை அவரே இசை அமைத்து, பாடி, நடித்துள்ளார்.
விஜய் நடித்த 'மதுர' படத்தை இயக்கிய மாதேஷ் இயக்கி உள்ளார். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த ஆல்பத்தை கனிமொழி எம்பி., வெளியிட்டார்.
இஷ்ரத் கூறும்போது “நம் நாட்டின் பெருமைகளை கூறவும், தாய் நாட்டின் மீதுள்ள நன்றியை வெளிப்படுத்தவும் இந்த ஆல்பத்தை உருவாக்கி உள்ளேன். தொடர்ந்து இசை ஆல்பங்களை வெளியிட இருக்கிறேன். விரைவில் திரைப்படங்களுக்கு இசை அமைக்கவும் இருக்கிறேன்'' என்றார்.