இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் கிட்டத்தட்ட 100 படங்கள் நடித்து முடித்து விட்டார். அதன்பிறகு பிரித்திவிராஜ் புரொடக்சன்ஸ் என்கிற நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்தும் வருகிறார்/ மேலும் இயக்குனராக மாறி இரண்டு படங்களையும் இயக்கி விட்டார். அதுமட்டுமல்ல மலையாள மொழி தாண்டி, தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் நடிப்பில் வெளியான டிரைவிங் லைசன்ஸ் என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஒரு நடிகருக்கும் அவரது தீவிர ரசிகனுக்கும் இடையே ஈகோ மோதல் ஏற்பட்டால் அது எந்த அளவிற்கு செல்லும் என்பது பற்றி ஒரு புதிய கோணத்தில் இந்த படம் உருவாகி இருந்தால் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த படம் இந்தியில் அக்சய் குமார், இம்ரான் காஸ்மின் நடிப்பில் 'செல்பி' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உருவாகி உள்ளது. இந்த படத்தை இந்தியில் நடிகர் பிரித்திவிராஜே தயாரித்தும் உள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரித்விராஜ் இந்த படம் ஒரு முக்கியமான கருத்தை சொல்வதாக உருவாகி இருந்ததால் மற்ற மொழிகளிலும் குறிப்பாக பாலிவுட்டிலும் இது ரீமேக் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதனால் நானே அக்சய் குமாரை தொடர்பு கொண்டு இந்த படம் பற்றி கூறினேன். படத்தை பார்த்த அக்சய் குமார் உடனடியாக இதை ரீமேக் செய்து நடிக்க ஒப்புக்கொண்டார். அதனால் அவருக்கும் இந்த படத்தை அப்படியே அதன் சாரம் கெடாமல் இந்திக்கு ஏற்றபடி மாற்றிய இயக்குனர் ராஜ் மேத்தாவிற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.