ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவை சேர்ந்த அமலாபால் தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருவைராணிகுளம் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் பிற மதத்தினர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்நிலையில் அமலாபால் இந்த கோயிலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் வெளியில் இருந்தபடி சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் அமலாபால்.
அவர் கூறுகையில், ‛‛திருவைராணி கோயிலுக்கு ஆர்வத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தேன். ஆனால் சாமியை அருகில் சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. கோயிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. 2023ம் ஆண்டிலும் மதபாகுபாடு காட்டப்படுவது வருத்தமாக உள்ளது. இந்தநிலை மாறும் என நம்புகிறேன். மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மக்களை மனிதர்களாக மதிக்கும் காலம் வரும்'' என தெரிவித்துள்ளார்.
‛‛இந்த கோயிலுக்கு ஏராளமானபேர் வருகிறார்கள். மாற்று மதத்தவரும் வருகிறார்கள். அவர்களை பற்றி வெளியே தெரியாததால் பிரச்னை ஏற்படுவது இல்லை. அமலாபால் பிரபலமானவர் என்பதால் அது சர்ச்சையாகி உள்ளது. கோயிலில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைப்படியே நடந்துள்ளோம். அதனால் அமலாபாலை அனுமதிக்கவில்லை'' என கோயில் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.