‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோக்களில் ஒருவர் சிரஞ்சீவி. அவரது பல படங்கள் வசூல் சாதனை படைத்தவை. இந்த பொங்கலுக்கு அவர் நடித்து வெளிவந்துள்ள 'வால்டர் வீரய்யா' படமும் நல்ல வசூலைக் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ஆந்திர மாநில முக்கிய நகரங்களில் ஒன்றான விசாகப்பட்டிணத்தில் சிரஞ்சீவி வீடு கட்டப் போவதாக அறிவித்தது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலத்தை விட்டு அவர் விசாகப்பட்டிணத்தில் வசிக்கப் போகிறார் என்ற வதந்தியும் பரவியது. அதை பலரும் அரசியலாக்கி செய்திகளை வெளியிட்டனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அது குறித்து சிரஞ்சீவி, “அங்கு ஒரு இடத்தை வாங்கினோம் என்பது பற்றி சொன்னேன், வேறு எதுவுமில்லை. எனது மகன் ராம் சரண் கோவாவில் வீடு கட்ட ஆரம்பித்துள்ளார். எனக்கு ஊட்டியில் வீடு கட்ட வேண்டும் என்று ஆசை. அது ஏறக்குறைய ரெடியாகிவிட்டது. அவற்றை முடித்த பின் விசாகப்பட்டிணத்திலும் வீடு கட்டலாம் என்றேன்,” என்று தெரிவித்துள்ளார்.
பல தெலுங்குப் படங்கள் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளன. சிரஞ்சீவியின் பல படங்களும் அதில் அடங்கும். இந்திய நடிகர்கள் பலருக்கும் ஊட்டி மிகவும் பிடித்தமான இடம். சிலருக்கு அங்கு வீடுகள் மட்டுமல்ல எஸ்டேட்களும் இருக்கின்றன.