தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து வரும் படம் சந்திரமுகி 2 . சந்திரமுகி படத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இதில் முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். தலைவி படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில் இந்த படத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து வருகிறார் கங்கனா.
சமீபகாலமாக அரசியல் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து அவ்வப்போது கருத்து சொல்லி வருவதால் அவர் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு வருகிறார். இதன் காரணமாக அவுட்டோர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சந்திரமுகி -2 படப்பிடிப்பு தளத்திற்கு தனது மேக்கப் மேன்கள், காஸ்டியூமர்கள் மட்டுமின்றி துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் நான்கு பேர் அடங்கிய செக்யூரிட்டியுடன் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து செல்கிறார் கங்கனா. இதனால் அவர் சந்திரமுகி-2 படப்பிடிப்பு தளத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் பரபரப்பு நிலவிக் கொண்டிருக்கிறது.