மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்' . இந்த படத்திற்காக ஐதராபாத்தில் உள்ள ரமோஜிராவ் பிலிம் சிட்டியில் மிகப்பெரிய அளவில் செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக தற்போது ஐதராபாத்தில் உள்ளார் ரஜினி.
இந்நிலையில் தன்னுடைய நீண்ட கால நண்பரான முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசியுள்ளார் ரஜினி. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது ஒருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டதோடு அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்தும், ஜெயிலர் படத்தின் பணிகள் குறித்தும் சந்திரபாபு நாயுடு ரஜினியிடம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, அன்பு நண்பர் ரஜினிகாந்தை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.




