தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இந்த படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ரேஷ்மா. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் பங்கேற்றார். தற்போது சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேஷ்மா தனக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார் . அது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில், நான் அமெரிக்காவில் இருந்தபோது எனது சகோதரி என்னுடைய அந்தரங்க வீடியோவை பார்த்ததாக ஒரு அதிர்ச்சி தகவல் கொடுத்தார். அந்த வீடியோவை எனக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அதில் இருப்பது நான் இல்லை. யாரோ மார்பிங் செய்து அதை வெளியிட்டுள்ளார்கள் என்பதை புரிந்து கொண்டேன். இதையடுத்து எனது குடும்பத்தாருக்கு அந்த உண்மையை புரிய வைத்தேன். என்னை போன்று திரை உலகை சாராத ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு கொடுமை நேர்ந்து இருந்தால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பார். சிலர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் இதன் உண்மைத்தன்மையை புரிந்து கொண்டு என்னை தேற்றியதால், நான் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்து விட்டேன் என்று தெறிவித்துள்ளார் நடிகை ரேஷ்மா.