இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு பிரபாஸ் தொடர்ந்து பான் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஹிட்டடித்த 'கேஜிஎப்' படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'ஆதிபுரூஷ்' படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. மற்றொரு படமான புரொஜெக்ட் கே படப்பிடிப்பும் நடக்கிறது.
இந்நிலையில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தை அபிஷேக் அகர்வால் தயாரிக்கவுள்ளார். இந்த படம் வரும் 2024-ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது. சுகுமாருடன் பிரபாஸ் கூட்டணி அமைக்கவிருப்பது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 'புஷ்பா 2' படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.