நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாகுபலி படத்தின் 2 பாகங்களின் அடுத்தடுத்த வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் பிரபாஸ். இன்னொரு பக்கம் தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலராக வலம் வரும் பிரபாஸின் திருமணம் எப்போது என்கிற கேள்விதான் அவரது ரசிகர்கள் பலருக்கும், திரையுலகை சேர்ந்த அவரது நலம் விரும்பிகளுக்கும் தலையாய கேள்வியாக உள்ளது. பாகுபலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அனுஷ்காவும் அவரும் காதலிப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியானாலும் இருவரும் அதை மறுத்து நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம் என்று இப்போது வரை கூறி வருகின்றனர்.
இடையில் தற்போது பிரபாஸுடன் ஜோடியாக நடித்துவரும் கிர்த்தி சனோன் என்பவர் அவரை காதலிக்கிறார் என்று கூட சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகையே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என மறுத்துவிட்டார். இந்த நிலையில் நடிகர் பாலகிருஷ்ணா தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் அன்ஸ்டாப்பில் என்கிற ரியாலிட்டி ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரபாஸ். வரும் சங்கராந்தி பண்டிகை சமயத்தில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரபாஸிடம் அவரது திருமணம் குறித்தும், அனுஷ்கா மற்றும் கிர்த்தி சனோன் ஆகியோருடன் காதல் இருக்கிறதா என்பது குறித்தும் பாலகிருஷ்ணா சில கேள்விகளை போட்டு வாங்கியுள்ளார்.
இதில் திருமணம் குறித்த கேள்விக்கு பிரபாஸ் பதில் சொல்லும்போது சல்மான்கானுக்கு பிறகு தான் என் திருமணம் நடக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஐம்பது வயதைத் தாண்டிவிட்ட சல்மான்கான் இனி திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது. இந்த நிலையில் சல்மான்கான் திருமணம் முடிந்தால் பிறகே தனக்கு திருமணம் என பிரபாஸ் கூறியது சீரியசாகவா அல்லது தமாஷாகவா என முழு நிகழ்ச்சி வெளியாகும்போதுதான் தெரியும்.