‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாகுபலி படத்தின் 2 பாகங்களின் அடுத்தடுத்த வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் பிரபாஸ். இன்னொரு பக்கம் தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலராக வலம் வரும் பிரபாஸின் திருமணம் எப்போது என்கிற கேள்விதான் அவரது ரசிகர்கள் பலருக்கும், திரையுலகை சேர்ந்த அவரது நலம் விரும்பிகளுக்கும் தலையாய கேள்வியாக உள்ளது. பாகுபலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அனுஷ்காவும் அவரும் காதலிப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியானாலும் இருவரும் அதை மறுத்து நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம் என்று இப்போது வரை கூறி வருகின்றனர்.
இடையில் தற்போது பிரபாஸுடன் ஜோடியாக நடித்துவரும் கிர்த்தி சனோன் என்பவர் அவரை காதலிக்கிறார் என்று கூட சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகையே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என மறுத்துவிட்டார். இந்த நிலையில் நடிகர் பாலகிருஷ்ணா தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் அன்ஸ்டாப்பில் என்கிற ரியாலிட்டி ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரபாஸ். வரும் சங்கராந்தி பண்டிகை சமயத்தில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரபாஸிடம் அவரது திருமணம் குறித்தும், அனுஷ்கா மற்றும் கிர்த்தி சனோன் ஆகியோருடன் காதல் இருக்கிறதா என்பது குறித்தும் பாலகிருஷ்ணா சில கேள்விகளை போட்டு வாங்கியுள்ளார்.
இதில் திருமணம் குறித்த கேள்விக்கு பிரபாஸ் பதில் சொல்லும்போது சல்மான்கானுக்கு பிறகு தான் என் திருமணம் நடக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஐம்பது வயதைத் தாண்டிவிட்ட சல்மான்கான் இனி திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது. இந்த நிலையில் சல்மான்கான் திருமணம் முடிந்தால் பிறகே தனக்கு திருமணம் என பிரபாஸ் கூறியது சீரியசாகவா அல்லது தமாஷாகவா என முழு நிகழ்ச்சி வெளியாகும்போதுதான் தெரியும்.