நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா . அதன் பிறகு தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார். 2002 ஆம் ஆண்டில் இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்ட பிறகு படிப்படியாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு ஆந்திர அரசியலில் களம் இறங்கினார். அந்த வகையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இரண்டு முறை எம்எல்ஏவான ரோஜா, தற்போது அக்கட்சியில் சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் பல விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து வரும் ரோஜா, சமீபத்தில் ஒரு கபடி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தபோது தானும் களத்தில் இறங்கி கபடி விளையாடினார். இந்த நிலையில் தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு பாக்சிங் போட்டியை தொடங்கி வைத்துள்ளார் ரோஜா. அப்போது தானும் கைகளில் கிளவுசை மாட்டிக் கொண்டு களத்தில் இறங்கி பாக்சிங் விளையாடி இருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.