இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா . அதன் பிறகு தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார். 2002 ஆம் ஆண்டில் இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்ட பிறகு படிப்படியாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு ஆந்திர அரசியலில் களம் இறங்கினார். அந்த வகையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இரண்டு முறை எம்எல்ஏவான ரோஜா, தற்போது அக்கட்சியில் சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் பல விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து வரும் ரோஜா, சமீபத்தில் ஒரு கபடி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தபோது தானும் களத்தில் இறங்கி கபடி விளையாடினார். இந்த நிலையில் தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு பாக்சிங் போட்டியை தொடங்கி வைத்துள்ளார் ரோஜா. அப்போது தானும் கைகளில் கிளவுசை மாட்டிக் கொண்டு களத்தில் இறங்கி பாக்சிங் விளையாடி இருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.