ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா . அதன் பிறகு தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார். 2002 ஆம் ஆண்டில் இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்ட பிறகு படிப்படியாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு ஆந்திர அரசியலில் களம் இறங்கினார். அந்த வகையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இரண்டு முறை எம்எல்ஏவான ரோஜா, தற்போது அக்கட்சியில் சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் பல விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து வரும் ரோஜா, சமீபத்தில் ஒரு கபடி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தபோது தானும் களத்தில் இறங்கி கபடி விளையாடினார். இந்த நிலையில் தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு பாக்சிங் போட்டியை தொடங்கி வைத்துள்ளார் ரோஜா. அப்போது தானும் கைகளில் கிளவுசை மாட்டிக் கொண்டு களத்தில் இறங்கி பாக்சிங் விளையாடி இருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.