ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சபரிமலையில் உள்ள ஐயப்பனின் பக்தையான மாளிகைப்புரத்து அம்மன் கதையை மையப்படுத்தி மலையாளத்தில் மாளிகைப்புரம் என்கிற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஐயப்ப பக்தையாக சிறுமி தேவானந்தா என்பவர் நடித்திருக்கிறார். விஷ்ணு சசி சங்கர் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அமலாபால் நடித்த கடாவர் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதிய அபிலாஷ் பிள்ளைதான் கதை எழுதியுள்ளார்.
இந்த படத்தின் துவக்கத்தில் ஐயப்பன் மற்றும் மாளிகைப்புரத்து அம்மன் இருவர் பற்றிய கதைச்சுருக்கம் இடம்பெறுகிறது. இதனை மம்முட்டி பேசினால் நன்றாக இருக்கும் என நினைத்த படக்குழுவினர் அவரிடம் அதை கோரிக்கையாக வைத்தனர். படத்தின் ஹீரோவான உன்னி முகுந்தனுடன் மம்முட்டி நெருங்கிய நட்பு கொண்டவர் என்பதால் அவரும் மறுப்பின்றி சம்மதித்து இந்த கதை சுருக்கத்திற்கு டப்பிங்கும் பேசியுள்ளார். மம்முட்டியின் குரல் இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்துவிட்டது என்கின்றனர் படக்குழுவினர்.