'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியான கன்னடத் திரைப்படம் 'காந்தாரா'. யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று இந்தியா முழுவதும் அதிக வசூலைக் குவித்துள்ளது.
கன்னடத்தில் படம் வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மூன்று வாரங்களுக்குப் பிறகு மலையாள மொழியிலும் வெளிவந்தது. 350 கோடி வசூலைக் கடந்துள்ள இந்தப் படம் ஹிந்தியில் மட்டுமே சுமார் 75 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளது. கர்நாடகாவில் 175 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 50 கோடி வசூலையும், வெளிநாடுகளில் 25 கோடி வசூலையும் கடந்துள்ளது. தமிழ், மலையாளத்தில் 20 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளது. அனைத்து மொழிகளிலும் தற்போதும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தை கர்நாடகாவில் தென் பகுதிகளில் பேசப்படும் 'துளு' மொழியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவின் தெற்குப் பகுதி, உடுப்பி ஆகிய இடங்களில் இம்மொழி பேசப்பட்டு வருகிறது. 'காந்தாரா' படத்தில் இடம் பெற்றுள்ள 'பஞ்சுருலி தெய்வம்' துளு மொழியில் பேசுவதாகத்தான் படத்திலும் குறிப்பிட்டிருந்தனர். உடுப்பி சார்ந்த மலைப் பிரதேசத்தில்தான் படத்தின் கதைக்களமும் அமைக்கப்பட்டிருந்தது. அம்மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதைதான் 'காந்தாரா'.