'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு சமீபத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். இதுகுறித்த பரபரப்பான ஒரு சில நிகழ்வுகள் அரங்கேறி தற்போது நிலைமை சுமுகமாக மாறி உள்ளது. நயன்தாராவை பொறுத்தவரை தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் புதிய படம் ஒன்றில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல, இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.
மாதவன், சித்தார்த் இருவருக்குமே மிக நெருங்கிய நண்பரான, அவர்களது படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சசிகாந்த், இந்த படத்தின் மூலம் இயக்குனராகிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆயுத எழுத்து படத்தில் மாதவன், சித்தார்த் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல மாதவனும் நயன்தாராவும் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.