எனது கதையைத்தான் திருடி இருக்கிறார்கள் : 'லாபத்தா லேடிஸ்' கதாசிரியர் குற்றச்சாட்டு | சினிமாவில் நடிப்பது எனது தனிப்பட்ட முடிவு : குஷ்பு மகள் அவந்திகா சொல்கிறார் | பிளாஷ்பேக்: முதல் செஞ்சுரி அடித்த சிவாஜி | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் காணாமல் போன நடிகை | 'ஸ்டன்ட் டிசைன்' ஆஸ்கர் விருது அறிவிப்பு: ராஜமவுலி மகிழ்ச்சி | சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பவன் கல்யாண் மகன் | ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் சீனா | 2028 முதல் ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்படும் 'ஸ்டன்ட் டிசைன்' | லோகேஷ் கனகராஜ் 'டிரெண்ட்'-ஐ தொடரும் மற்ற இயக்குனர்கள் | 22 படங்களுடன் கெத்து காட்டும் ஓடிடி தளங்கள் |
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு சமீபத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். இதுகுறித்த பரபரப்பான ஒரு சில நிகழ்வுகள் அரங்கேறி தற்போது நிலைமை சுமுகமாக மாறி உள்ளது. நயன்தாராவை பொறுத்தவரை தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் புதிய படம் ஒன்றில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல, இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.
மாதவன், சித்தார்த் இருவருக்குமே மிக நெருங்கிய நண்பரான, அவர்களது படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சசிகாந்த், இந்த படத்தின் மூலம் இயக்குனராகிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆயுத எழுத்து படத்தில் மாதவன், சித்தார்த் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல மாதவனும் நயன்தாராவும் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.