எனக்கு ஜாதி பிடிக்காது : மேனனை உதறித் தள்ளிய சம்யுக்தா | 92வது வருடத்தில் தெலுங்கு சினிமா | 3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் | போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா | 'டிரோல்'களுக்கு பதிலடி கொடுத்த தமன் | 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! |
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு சமீபத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். இதுகுறித்த பரபரப்பான ஒரு சில நிகழ்வுகள் அரங்கேறி தற்போது நிலைமை சுமுகமாக மாறி உள்ளது. நயன்தாராவை பொறுத்தவரை தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் புதிய படம் ஒன்றில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல, இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.
மாதவன், சித்தார்த் இருவருக்குமே மிக நெருங்கிய நண்பரான, அவர்களது படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சசிகாந்த், இந்த படத்தின் மூலம் இயக்குனராகிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆயுத எழுத்து படத்தில் மாதவன், சித்தார்த் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல மாதவனும் நயன்தாராவும் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.