‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் நடித்த புதுமுக நடிகரும், தொழிலதிபருமான வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தை உள்ளது. தற்போது கணவருடன் இணைந்து படத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று கணவருடன் திருப்பதிக்கு சென்ற நமீதா அங்கு சாமி தரிசனம் செய்தார். கடந்த முறை திருப்பதி வந்தபோது அங்கு ஏற்பாடுகள் சரியில்லை என்று நமீதா குற்றம் சாட்டியிருந்தார். அதனால் இந்த முறை தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று சாமி தரிசனம் செய்ய வைத்து, ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி அனுப்பி வைத்தனர்.
கோவிலுக்கு வெளியே நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் “குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக போய்கொண்டிருக்கிறது. எனது குழந்தைகள் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லவே வந்தேன். தற்போது படங்களில் நடிப்பதை விட அரசியலிலேயே அதிக ஆர்வம் உள்ளது. விரைவில் தீவிர அரசியலில் குதிக்க இருக்கிறேன். அதுவரை காத்திருங்கள்” என்றார்.
நமீதா கடந்த தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ததது குறிப்பிடத்தக்கது.