'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் புதிய படம் 'கொன்றால் பாவம்'. அவருடன் சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோரும் நடிக்க உள்ளனர். தயாள் பத்மநாபன் இயக்குகிறார்.
1981-களில் நடக்கும் கிளாஸிக் கிரைம் த்ரில்லர் கதையான இந்த படம் கன்னடத்தில் வெளிவந்த 'கரால ராத்திரி' என்ற படத்தின் ரீமேக். இந்த படம் கன்னடத்தில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த துணை நடிகைக்கான கர்நாடக மாநில விருதுகளை பெற்றது. இந்த படத்தை இயக்கிய தயாள் பத்மநாபனே இப்போது தமிழிலும் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் வருகிற 1ம் தேதி ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்க இருக்கிறது.