ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் |
இயக்குனர் வெற்றிமாறன், லாக்கப் நாவலை ‛விசாரணை' என்ற பெயரிலும், பூமணி எழுதிய வெக்கை நாவலை ‛அசுரன்' என்ற பெயரிலும் திரைப்படமாக எடுத்துள்ளார். தற்போது விடுதலை படத்தை இயக்கி வரும் அவர், அடுத்ததாக, சி.சு.செல்லப்பா எழுதிய ‛வாடிவாசல்' நாவலை அதே பெயரில் இயக்க உள்ளார். இப்படத்தை தாணு தயாரிக்கிறார், ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.
ஜல்லிக்கட்டை மையப்படுத்திய இக்கதையில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ஜல்லிக்கட்டை மையப்படுத்திய ‛பேட்டைக்காளி' வெப் தொடரை தயாரித்துள்ள வெற்றிமாறன், வாடிவாசல் படத்தையும் அதே போன்ற கதையை தான் இயக்க உள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து விளக்கமளித்த வெற்றிமாறன், ‛பேட்டைக்காளி இன்னைக்கு நடக்குற விஷயம். வாடிவாசல் படம் 1960-ம் ஆண்டு நடக்கும் கதை' எனத் தெரிவித்துள்ளார்.