தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

பிரதமர் நரேந்திர மோடி பல சமயங்களில் தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் நேற்றைய தினம் கார்கிலில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது அவர்களுக்கு தனது கையால் இனிப்பு வழங்கினார். அங்கு நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழக ராணுவ வீரர்கள், சுராங்கனி என்ற தமிழ் பாடலை பாடினார்கள். அதோடு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த வந்தே மாதரம் பாடலையும் பாடினார்கள்.
இந்த பாடல்களை பிரதமர் மோடி ரசித்து கேட்டு கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். அதை அடுத்து தனது ட்விட்டரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர் என்று பதிவிட்டு அங்கு எடுக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். அவரது இந்த டுவிட்டர் பதிவை இசையமைப்பாளர் ஏ .ஆர். ரகுமான் ரீ-டுவீட் செய்துள்ளார் . அதோடு, இதயம் இதயம் துடிக்கின்றதே, எங்கும் உன் போல் பாசம் இல்லை, ஆதலால் உன் மடி தேடினேன், தாய் மண்ணே வணக்கம். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.




