நடிகை டூ ஓவியக் கலைஞர்: ஷாம்லியின் தனித்துவ வளர்ச்சி | கெணத்த காணோம் : வடிவேலு காமெடி டயலாக்கில் யோகிபாபு படத் தலைப்பு | பிளாஷ்பேக் : நீச்சல் உடையில் பரபரப்பு கிளப்பிய அமலா | 4 புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் காந்தி கிருஷ்ணா | பிளாஷ்பேக்: எக்ஸ்பிரஸ் கவிஞர் | 'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' : இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத் | நுரையீரல் பிரச்னை : கன்னட நடிகை ரஷ்மி லீலா மரணம் | நுகர்வு, சுவை திறனை இழந்த மம்முட்டி | 'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? |

பிரதமர் நரேந்திர மோடி பல சமயங்களில் தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் நேற்றைய தினம் கார்கிலில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது அவர்களுக்கு தனது கையால் இனிப்பு வழங்கினார். அங்கு நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழக ராணுவ வீரர்கள், சுராங்கனி என்ற தமிழ் பாடலை பாடினார்கள். அதோடு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த வந்தே மாதரம் பாடலையும் பாடினார்கள்.
இந்த பாடல்களை பிரதமர் மோடி ரசித்து கேட்டு கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். அதை அடுத்து தனது ட்விட்டரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர் என்று பதிவிட்டு அங்கு எடுக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். அவரது இந்த டுவிட்டர் பதிவை இசையமைப்பாளர் ஏ .ஆர். ரகுமான் ரீ-டுவீட் செய்துள்ளார் . அதோடு, இதயம் இதயம் துடிக்கின்றதே, எங்கும் உன் போல் பாசம் இல்லை, ஆதலால் உன் மடி தேடினேன், தாய் மண்ணே வணக்கம். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.




