தெலுங்கு நடிகருடன் இணையும் பி.எஸ்.மித்ரன்! | பிரபாஸ் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா! | அக்., 31ல் ஒரே பாகமாக வெளியாகும் ‛பாகுபலி : தி எபிக்' | 'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' | ‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் |
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு சேலை, வேட்டி மற்றும் இனிப்புகள் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டது. இதற்காக நடிகர் சூர்யா 10 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். அதோடு நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன், கோவை சரளா, ஸ்ரீமன், நாசர், லதா, விமல், கருணாஸ், மனோபாலா, தளபதி தினேஷ், விக்னேஷ், வாசு தேவன் ஆகியோர் இணைந்து 2 லட்சம் ரூபாய் வழங்கினர். இந்த தொகையை கொண்டு நலிந்த கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. சங்கத்தில் நடந்த விழாவில் கார்த்தி இந்த பரிசுகளை வழங்கினார். இதில் பூச்சி முருகன், மனோபாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெளியூரில் இருக்கும் கலைஞர்களுக்கு பரிசு பொருட்கள் அவர்களது வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.