ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ராம், சுப்பிரமணியபுரம், பருத்திவீரன், பிதாமகன், சண்டைக்கோழி உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடியனாக நடித்துள்ள கஞ்சா கருப்பு, கடந்த சில வருடங்களாக படத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியான மாமனிதன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் நடைபெற்ற ஓங்காரம் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அவருடன் தயாரிப்பாளர் ராஜன், இயக்குனர் மோகன் ஜி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கஞ்சா கருப்பு படம் வெற்றி அடையும் என்று பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக இவர் அப்பாடத்தின் ஹீரோயினை தகாத வார்த்தையில் திட்டி பேசினார். இந்த பட இசை வெளியீட்டு விழாவிற்கு வர ஹீரோயின் ஒரு லட்சம் கேட்டதாக கூறினார். அதை கொடுக்க முடியாத காரணத்தினால் இந்த விழாவிற்கு அவர் வரவில்லை என்று கூறிய கஞ்சா கருப்பு சில தகாத வார்த்தைகளையும் குறிப்பிட்டும் பேசினார். மேலும், இந்த விழாவிற்கு வந்திருந்தால் நிறைய பட வாய்ப்பு கிடைத்திருக்கும் அதை அவர் தவற விட்டு விட்டார் என்றார். கஞ்சா கருப்புவின் இந்த மோசமான பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.