விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வெற்றி பெற்றதுடன் அல்லாமல் நாயகன் அல்லு அர்ஜுனுக்கும் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகாவிற்கும் ஒரே பாடலுக்கு ஆடிய சமந்தாவுக்கும் கூட ரசிகர்களிடம் இன்னும் மிகப்பெரிய அளவில் அங்கீகாரங்களை பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக கடந்துசென்ற விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் நடித்த கதாபாத்திர தோற்றத்தில் விதவிதமான பிள்ளையார் சிலைகள் உருவாக்கப்பட்டு மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தன. பொதுமக்களால் அதிக அளவிலும் வாங்கி செல்லப்பட்டன.
தற்போது நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வட மாநிலங்களில் கொண்டாட்டமும் கோலாகலமும் துவங்கியுள்ளன. ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா ஆடிய சாமி சாமி பாடல் பள்ளிக்கூடங்களில், கலை நிகழ்ச்சிகளில், என குழந்தைகள், இளம்பெண்கள் என பலராலும் விரும்பி ஆடப்பட்டு அந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் குஜராத்தின் ஒரு கிராமம் ஒன்றில் நவராத்திரி கொண்டாட்டத்தின் போது சாமி சாமி பாடலை ஒலிக்கவிட்டு கிராமத்து பெண்கள் வட்டமாக நின்று கோலாட்டம் அடித்து ஆடும் வீடியோ ஒன்றும்  தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இது ஒரு பக்கம் என்றால் டீனேஜ் இளைஞர்களும் சாமி சாமி பாடலுக்கு நடனமாடும் வீடியோக்களும் வெளியாகி ஆச்சரியத்தை இருமடங்காக்கி வருகின்றன.  




