மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே(36) உடல்நலக் குறைவால் திடீரென மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. தெலுங்கில் பிரபாஸ் உடன் புராஜெக்ட் கே, ஹிந்தியில் ஷாரூக்கான் உடன் ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தீபிகாவிற்கு உடல்சோர்வு ஏற்பட்டு மயக்க அடைவது போன்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவசரமாக அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பல்வேறு விதமான சோதனைகள் மேற்கெள்ளப்பட்டன. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் அவருக்கு உடலில் என்ன பிரச்னை என்ற விபரம் வெளியாக வில்லை.
சில வாரங்களுக்கு முன் பிரபாஸின் புராஜெக்ட் கே படத்தில் நடித்தபோதும் தீபிகா உடல்நலம் பாதிக்கப்பட்டார். அப்போது அவரது இதய துடிப்பு வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாக கூறப்பட்டது. அதற்கான சிகிச்சை மேற்கொண்ட பின் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
தீபிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேதியறிந்து ஏராளமான ரசிகர்கள் அவருக்கு என்னாச்சு என சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.