அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே(36) உடல்நலக் குறைவால் திடீரென மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. தெலுங்கில் பிரபாஸ் உடன் புராஜெக்ட் கே, ஹிந்தியில் ஷாரூக்கான் உடன் ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தீபிகாவிற்கு உடல்சோர்வு ஏற்பட்டு மயக்க அடைவது போன்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவசரமாக அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பல்வேறு விதமான சோதனைகள் மேற்கெள்ளப்பட்டன. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் அவருக்கு உடலில் என்ன பிரச்னை என்ற விபரம் வெளியாக வில்லை.
சில வாரங்களுக்கு முன் பிரபாஸின் புராஜெக்ட் கே படத்தில் நடித்தபோதும் தீபிகா உடல்நலம் பாதிக்கப்பட்டார். அப்போது அவரது இதய துடிப்பு வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாக கூறப்பட்டது. அதற்கான சிகிச்சை மேற்கொண்ட பின் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
தீபிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேதியறிந்து ஏராளமான ரசிகர்கள் அவருக்கு என்னாச்சு என சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.