நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

எழுத்தாளராக இருந்த மாரி செல்வராஜ், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர். கதிர், ஆனந்தி நடித்த 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர். அதன் பிறகு தனுஷ் நடித்த 'கர்ணன்' படத்தின் மூலம் விருதுகளை குவித்தார்.
தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து விட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதன் பிறகு அவர் துருவ் விக்ரம் நடிக்கும் கபடி வீரன் என்ற படத்தை இயக்க இருக்கிறார்.
இதற்கு இடையில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாருக்காக வெப் தொடர் ஒன்றை அவர் இயக்க இருக்கிறார். இதில், கலையரசன் நாயகனாக நடிக்கிறார். திருநெல்வேலி அருகே இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. மாரி செல்வராஜின் உதவியாளர்கள், ஸ்கிரிப்ட பணி மற்றும் லொக்கேஷன் தேர்வு, நடிகர், நடிகைகள் தேர்வில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தொடரை இயக்கி முடித்து விட்டு கபடி வீரன் படத்தை இயக்க இருக்கிறார் மாரி செல்வராஜ்.