இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் தென்னிந்திய மொழியை சேர்ந்த பல நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். மலையாளத்திலிருந்து விநாயகன், கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார் உள்ளிட்ட நடிகர்கள் இதில் ஒப்பந்தமாகி உள்ள நிலையில் கே.ஜி.எப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹரிஷ் ராய் என்பவர் தற்போது ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கேஜிஎப் படத்தில் நாயகன் யாஷ்ஷுக்கு ஆதரவாக படம் முழுதும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இந்த ஹரிஷ் ராய்.
கடந்த சில மாதங்களாகவே புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ஹரிஷ் ராய். அந்த சமயத்தில் நடிப்பின் மீதான தனது ஆர்வம் குறைந்து விடாமல் இருப்பதற்கும் புற்றுநோய் காரணமாக தனது குரல் மங்கிப் போய்விடாமல் இருப்பதற்கும் மருத்துவமனையிலேயே விதவிதமாக நடித்து சில வீடியோக்களை எடுத்து சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதற்கு பலனாக தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.
இதுகுறித்து ஹரிஷ் ராய் கூறும் போது, இந்த இக்கட்டான சமயத்தில் என் மனதை தளர விடாமல், என்னை கைவிடாமல் காப்பாற்றி இப்படி ஒரு அரிய வாய்ப்பை வழங்கிய கடவுளுக்கு நன்றி. ரஜினிகாந்த்துடனும் சிவராஜ்குமாருடனும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறேன். இது என் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் மருத்துவமனையில் இருந்தபோது இவரை தொடர்பு கொண்டு சாம்பிள் வீடியோ அனுப்பச்செய்து அதன் மூலம் இவரை ஓகே செய்தாராம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.