இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் | பிளாஷ்பேக்: 11 வயதில் பின்னணி பாடகியான ஏ.பி.கோமளா | பின்வாங்கிய ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் : அப்போ ராஜமவுலிக்கு வெற்றியா? | ராம் சரண் படத்தில் ஷோபனா? | சிரஞ்சீவி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா | ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு |

தமிழில் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, ஹிந்தியில் குட்பை, மிஷன் மஜ்னு, அனிமல் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்துள்ள குட்பை படம் அடுத்த மாதம் 7ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது அப்படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அப்போது மீடியாக்களுக்கு அவர் அளித்த பேட்டியில் அல்லு அர்ஜுனுடன் நடிக்க இருக்கும் புஷ்பா- 2 படம் குறித்த ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் புஷ்பா- 2 படத்தின் வேலைகளை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க போகிறேன். எனது கேரியரில் ஒரு முக்கியமான படமாக புஷ்பா அமைந்தது. ஹிந்தி படங்களில் கமிட்டாகி நான் நடித்து வந்த நேரத்தில் இப்படம் ஹிந்தியிலும் வெளியாகி வசூல் சாதனை செய்தது. அதனால் ஹிந்தியில் நடிக்கும் படங்கள் வெளியாவதற்கு முன்பே புஷ்பா மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு பரிட்சயமாகி விட்டேன். அதனால் புஷ்பா-2 படத்தில் நடிப்பதில் கூடுதல் ஆர்வமாக இருக்கிறேன். இந்த இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுனின் மனைவி ஸ்ரீவள்ளியாக நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.




