நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது | தயாரிப்பாளர் மகன் அறிமுகமாகும் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு | நீதிமன்றத்தில் பிரபல நடிகை ரகசிய வாக்குமூலம் ; வெளிநாட்டுக்கு தப்பிய இயக்குனருக்கு லுக் அவுட் நோட்டீஸ் | புஷ்பா-2வுக்காக வழிவிட்டு ஒதுங்கிய பாலிவுட் படக்குழுவுக்கு அல்லு அர்ஜுன் நன்றி | பிளாஷ்பேக் : வெள்ளி விழா பட வாய்ப்பை இழந்த சுரேஷ் | பிளாஷ்பேக் : முதல் படத்திலிருந்து நீக்கப்பட்ட கிருஷ்ணன் - பஞ்சு | விலங்கு பறவைளுடன் போட்டோ ஷூட் நடத்திய ஆராத்யா |
இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படம் இரு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றது. வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி இந்த படத்தின் முதல் பாகம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை சார்ந்த ஒரு சுவாரஸ்ய தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் ஆரம்பகட்டத்தில் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் விஜயையும், அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் மகேஷ் பாபுவையும் நடிக்க வைக்க வேண்டும் என மணிரத்னம் விரும்பினார் என கூறியுள்ளார்.