இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படம் இரு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றது. வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி இந்த படத்தின் முதல் பாகம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை சார்ந்த ஒரு சுவாரஸ்ய தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் ஆரம்பகட்டத்தில் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் விஜயையும், அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் மகேஷ் பாபுவையும் நடிக்க வைக்க வேண்டும் என மணிரத்னம் விரும்பினார் என கூறியுள்ளார்.