'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
மிகப்பெரிய வெற்றி பெற்ற எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் ஷர்வானந்த். அதைத்தொடர்ந்து ஒன்றிரண்டு தமிழ் படங்களில் நடித்தவர், தற்போது தெலுங்கில் ஓகே ஓக ஜீவிதம் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் கணம் என்கிற பெயரில் வெளியாகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்க, நடிகை அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..
இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தங்களது குடும்ப தயாரிப்பு நிறுவனம் என்பதால், நட்புக்காக நடிகர் கார்த்தி இந்த படத்தில் ஒரு பாடலைப் பாடி உள்ளதோடு குழந்தைகளுடன் சேர்ந்து அந்த பாடலிலும் பாடலிலும் நடித்துள்ளார். இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள ஷர்வானந்த் கார்த்தியை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துள்ளார்