விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது |
சமீபத்தில் ராஜ்யசபா எம்பி ஆன இசையமைப்பாளர் இளையராஜா, தற்போது விடுதலை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதோடு வெளிநாடுகளுக்கு சென்றும் அடிக்கடி இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஹங்கேரியில் நடக்கும் இசை கச்சேரிக்காக இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார் இளையராஜா. அதிகாலை 2 மணிக்கு விமானம் புறப்படும் என்பதால் அதற்கு முன்னதாகவே அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்து விட்டார். ஆனால் நேற்று இரவு பலத்த மழை பெய்ததின் காரணமாக விமானங்கள் புறப்படுவது மற்றும் தரை இறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
குறிப்பாக, சென்னையில் தரையிறங்க இருந்த விமானங்கள் பெங்களூரு, ஐதராபாத் என்று மற்ற விமான நிலையங்களில் தரை இறக்கப்பட்டன. இதன் காரணமாக இளையராஜா துபாய்க்கு செல்ல இருந்த விமானமும் தாமதமானது. அதன் பிறகு ஓடுதளத்தில் மழை நீர் தேங்கி இருந்ததால் மேலும் 3 மணி நேரம் தாமதமாகும் என்று விமான நிலையம் அறிவித்தது. பின்னர் வானம் மேகமூட்டமாக இருந்ததால் இரண்டு மணி நேரம் தாமதமாக்கப்பட்டது. இப்படியாக 7 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்து விட்டு அதன் பிறகு துபாய்க்கு புறப்பட்டு சென்றுள்ளார் இளையராஜா.