Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பருத்தி வீரன் போன்ற கதை தேடும் சிபிராஜ்!

02 பிப், 2013 - 01:44 IST
எழுத்தின் அளவு:

ஸ்டூடண்ட் நம்பர்-1 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சிபிராஜ். தொடர்ந்து ஜோர், லீ உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தற்போது கைவசம் ஒரு படம்கூட இல்லை. பல படங்களில் நடித்து தன்னை நிரூபித்து விட்டபோதும் யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பதால் மனசொடிந்து போயிருக்கிறார் சிபிராஜ். என்றாலும், தனது திரையுலக நண்பர்களான பிரசன்னா, ஷக்தி போன்ற நடிகர்கள் நடிக்கும் பட ஸ்பாட்டுகளுக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் அவர், மீண்டும் படங்களில் நடித்து எனக்கென ஒரு இடத்தை பிடிக்காமல் விடமாட்டேன் என்று உறுதியுடன் பேசி வருகிறார்.

அவரிடத்தில் அடுத்து எந்த மாதிரியான கதைகளில் நடிக்க முடிவெடுத்திருக்கிறீர்கள்? என்று கேட்டால், கார்த்தி நடித்த பருத்திவீரன் மாதிரி கதையில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. கிராமிய கதைகளில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த நிறைய வாய்ப்பு இருக்கும். அதனால் அந்த மாதிரியான மாறுபட்ட கதைகளை தேடுகிறேன் என்று சொல்லும சிபிராஜ், சினிமா சிலகாலம் என்னை வெளியேற்றினாலும், மீண்டும் அரவணைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் உள்ளது என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)