சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
ஸ்டூடண்ட் நம்பர்-1 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சிபிராஜ். தொடர்ந்து ஜோர், லீ உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தற்போது கைவசம் ஒரு படம்கூட இல்லை. பல படங்களில் நடித்து தன்னை நிரூபித்து விட்டபோதும் யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பதால் மனசொடிந்து போயிருக்கிறார் சிபிராஜ். என்றாலும், தனது திரையுலக நண்பர்களான பிரசன்னா, ஷக்தி போன்ற நடிகர்கள் நடிக்கும் பட ஸ்பாட்டுகளுக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் அவர், மீண்டும் படங்களில் நடித்து எனக்கென ஒரு இடத்தை பிடிக்காமல் விடமாட்டேன் என்று உறுதியுடன் பேசி வருகிறார்.
அவரிடத்தில் அடுத்து எந்த மாதிரியான கதைகளில் நடிக்க முடிவெடுத்திருக்கிறீர்கள்? என்று கேட்டால், கார்த்தி நடித்த பருத்திவீரன் மாதிரி கதையில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. கிராமிய கதைகளில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த நிறைய வாய்ப்பு இருக்கும். அதனால் அந்த மாதிரியான மாறுபட்ட கதைகளை தேடுகிறேன் என்று சொல்லும சிபிராஜ், சினிமா சிலகாலம் என்னை வெளியேற்றினாலும், மீண்டும் அரவணைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் உள்ளது என்கிறார்.