நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமாக்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவரது வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான படம் 'டர்ட்டி பிக்சர்'. நடிகை வித்யாபாலன் கதாநாயகியாக நடித்த இந்த படம் அவரது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிலையில் 10 வருடம் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஏக்தா கபூர்.
இந்த இரண்டாம் பாகத்திற்கான கதையை தயார் செய்யும் பொறுப்பை பிரபல கதாசிரியர் கனிகா தில்லானிடம் ஒப்படைத்துள்ளார். அவருக்கு உதவியாக இன்னொரு கதாசிரியரும் இந்த இரண்டாம் பாகத்திற்கு பணிபுரிகிறார். அதே சமயம் முதல் பாகத்தில் கதாசிரியராக பணியாற்றிய ரஜத் அரோரா இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு கங்கனாவை ஏக்தா கபூர் அணுகியதாகவும் அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்னொரு பக்கம் இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க டாப்ஸியும், கீரீத்தி சனானும் தங்களது விருப்பத்தை வெளியிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த படத்தின் முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த வித்யா பாலன், இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா என்கிற பேச்சே எழவில்லை என்பது ஆச்சரியம் தான்.