வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

தமிழ் சினிமாவில் கேரக்டர் நடிகையாக நடித்து வந்த லட்சுமி ராமகிருஷ்ணன், சொல்வதெல்லாம் உண்மை சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அதன் பிறகு ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் என நான்கு படங்களை இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் சமுத்திரகனியை நாயகனாகவும், மிஷ்கினை வில்லனாகவும் வைத்து தனது புதிய படத்தை இயக்கி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இப்படத்தின் இசை பணிகளுக்காக இளையராஜாவை சந்தித்தபோது அவர் நாற்காலியில் அமர்ந்து ஆர்மோனியத்தில் டியூன் போட, கீழே தரையில் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால் அந்த புகைப்படங்களை பார்த்த சில நெட்டிசன்கள், மற்றவர்களையும் தனக்கு இணையாக சேரில் உட்கார வைத்தால் இளையராஜா குறைந்து விடுவாரா? சக மனிதர்களுக்கு மதிப்பளிக்க தெரியாத மனிதர் என்று அவரை விமர்சித்து இருந்தார்கள்.
இதையடுத்து லட்சுமி ராமகிருஷ்ணன், அவர்களுக்கு ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில், இளையராஜா கடவுளுக்கு சமமானவர். அவரது காலடியில் அமர்ந்திருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அதுமட்டுமின்றி தரையில் உட்காருவது உடம்புக்கு நல்லது. அதனால் இதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அந்த நெட்டிசன்களுக்கு ஒரு பதில் கொடுத்து இருக்கிறார்.




