சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தமிழ் சினிமாவில் கேரக்டர் நடிகையாக நடித்து வந்த லட்சுமி ராமகிருஷ்ணன், சொல்வதெல்லாம் உண்மை சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அதன் பிறகு ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் என நான்கு படங்களை இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் சமுத்திரகனியை நாயகனாகவும், மிஷ்கினை வில்லனாகவும் வைத்து தனது புதிய படத்தை இயக்கி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இப்படத்தின் இசை பணிகளுக்காக இளையராஜாவை சந்தித்தபோது அவர் நாற்காலியில் அமர்ந்து ஆர்மோனியத்தில் டியூன் போட, கீழே தரையில் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால் அந்த புகைப்படங்களை பார்த்த சில நெட்டிசன்கள், மற்றவர்களையும் தனக்கு இணையாக சேரில் உட்கார வைத்தால் இளையராஜா குறைந்து விடுவாரா? சக மனிதர்களுக்கு மதிப்பளிக்க தெரியாத மனிதர் என்று அவரை விமர்சித்து இருந்தார்கள்.
இதையடுத்து லட்சுமி ராமகிருஷ்ணன், அவர்களுக்கு ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில், இளையராஜா கடவுளுக்கு சமமானவர். அவரது காலடியில் அமர்ந்திருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அதுமட்டுமின்றி தரையில் உட்காருவது உடம்புக்கு நல்லது. அதனால் இதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அந்த நெட்டிசன்களுக்கு ஒரு பதில் கொடுத்து இருக்கிறார்.