10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து நான்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் அடுத்தபடியாக விஜய் நடிக்கும் 67 வது படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். அதனால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருக்கிறது.
விஜய் 67 வது படத்தை ஒரு மாறுபட்ட கேங்ஸ்டர் கதையில் இயக்க தயாராகி வரும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் திரைக்கதையில் பல புதுமைகளை செய்ய திட்டமிட்டுள்ளார். முக்கியமாக இந்த படத்தில் ஆறு வில்லன்கள் நடிக்கயிருக்கிறார்கள். சஞ்சய்தத், அர்ஜுன், பிரிதிவிராஜ், கவுதம் மேனன் ஆகியோர் தற்போது ஒப்பந்தமாக இருக்கிறார்கள். இன்னும் இரண்டு அதிரடி வில்லன்களை தேடி வருகிறார்.
மேலும், இந்த படமும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படத்தைப் போலவே பாடல்களே இல்லாத படமாக உருவாகிறது. ஆக்ஷன் திரைக்கதை என்பதால் பாடல் காட்சி இருந்தால் கதை ஓட்டத்திற்கு தடையை ஏற்படுத்தும் என்பதற்காக இந்த முடிவை எடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ், இப்படத்தை விஜய் படங்களில் புதுமையானதாகவும், முழுக்க முழுக்க தனது பாணி படமாக இயக்குவதற்கும் திட்டமிட்டு இருக்கிறார்.