2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் |
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து நான்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் அடுத்தபடியாக விஜய் நடிக்கும் 67 வது படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். அதனால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருக்கிறது.
விஜய் 67 வது படத்தை ஒரு மாறுபட்ட கேங்ஸ்டர் கதையில் இயக்க தயாராகி வரும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் திரைக்கதையில் பல புதுமைகளை செய்ய திட்டமிட்டுள்ளார். முக்கியமாக இந்த படத்தில் ஆறு வில்லன்கள் நடிக்கயிருக்கிறார்கள். சஞ்சய்தத், அர்ஜுன், பிரிதிவிராஜ், கவுதம் மேனன் ஆகியோர் தற்போது ஒப்பந்தமாக இருக்கிறார்கள். இன்னும் இரண்டு அதிரடி வில்லன்களை தேடி வருகிறார்.
மேலும், இந்த படமும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படத்தைப் போலவே பாடல்களே இல்லாத படமாக உருவாகிறது. ஆக்ஷன் திரைக்கதை என்பதால் பாடல் காட்சி இருந்தால் கதை ஓட்டத்திற்கு தடையை ஏற்படுத்தும் என்பதற்காக இந்த முடிவை எடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ், இப்படத்தை விஜய் படங்களில் புதுமையானதாகவும், முழுக்க முழுக்க தனது பாணி படமாக இயக்குவதற்கும் திட்டமிட்டு இருக்கிறார்.