கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
சமீபத்தில் திரைப்பட ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், ஸ்ரீரங்கம் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு எதிராக ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டு இருந்தார். அதையடுத்து அவர் மீது இரு பிரிவினருக்கிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக திராவிட கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். பின்னர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் கனல் கண்ணன். ஆனால் அவரது அந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்து விட்டார்கள். இந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த கனல் கண்ணனை தேடி வந்த காவல்துறையினர் தற்போது புதுச்சேரியில் அவர் இருப்பதை அறிந்து அங்கு சென்று கைது செய்துள்ளார்கள்.