அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் | பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா | டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன் | ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் |

சமீபத்தில் திரைப்பட ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், ஸ்ரீரங்கம் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு எதிராக ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டு இருந்தார். அதையடுத்து அவர் மீது இரு பிரிவினருக்கிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக திராவிட கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். பின்னர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் கனல் கண்ணன். ஆனால் அவரது அந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்து விட்டார்கள். இந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த கனல் கண்ணனை தேடி வந்த காவல்துறையினர் தற்போது புதுச்சேரியில் அவர் இருப்பதை அறிந்து அங்கு சென்று கைது செய்துள்ளார்கள்.




