வதந்தி வெப் தொடர் 2ம் பாகத்தில் சசிகுமார்? | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் இரு படங்கள் | மனோஜ் பாரதி உடல் தகனம் : அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி | மூக்குத்தி அம்மன் 2 ; சுந்தர்.சி, நயன்தாரா மோதலா? : குஷ்பூ வெளியிட்ட தகவல் | பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் | ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகி இவரா? | சமந்தாவின் நிறைவேறாத ஆசை | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் | புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா |
சமீபத்தில் திரைப்பட ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், ஸ்ரீரங்கம் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு எதிராக ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டு இருந்தார். அதையடுத்து அவர் மீது இரு பிரிவினருக்கிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக திராவிட கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். பின்னர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் கனல் கண்ணன். ஆனால் அவரது அந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்து விட்டார்கள். இந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த கனல் கண்ணனை தேடி வந்த காவல்துறையினர் தற்போது புதுச்சேரியில் அவர் இருப்பதை அறிந்து அங்கு சென்று கைது செய்துள்ளார்கள்.