இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

விஜய், தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் முதன்முறையாக பிரின்ஸ் என்கிற நேரடியாக தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஜதி ரத்னாலு என்கிற படத்தை இயக்கிய கே.வி.அனுதீப் இந்த படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரிஷபோப்ஷகா நடிக்கிறார். தெலுங்கு, தமிழ் என இருமொழி படமாக உருவாகும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தமிழ்நாட்டிலும் நடைபெற்றுள்ளது.
அந்தவகையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றை கடந்த நான்கு நாட்களாக பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படமாக்கி வந்தனர். இந்த நிலையில் பாடல் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாக விட்டாலும் இத்துடன் கிட்டத்தட்ட மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாகவும் இன்னும் பேட்ச் ஒர்க் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.




