ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பீஸ்ட் படத்தை அடுத்து தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வர உள்ளது. அடுத்தபடியாக மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் விஜய்யின் 68வது படத்தை சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக செய்தி வைரலாகி வந்தது. டான் படத்தை இயக்கி வந்த போதே விஜய்யை சந்தித்து கதை சொல்லி அவர் ஓகே பண்ணி விட்டதாகவும் கூறப்பட்டது. இப்படியொரு செய்தி வெளியானதை அடுத்து தற்போது அதுகுறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் சிபி சக்ரவர்த்தி.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், டான் படத்தை அடுத்து புதிய படத்திற்கான கதையை தற்போது தயார் செய்து வருகிறேன். இந்த கதை பணிகள் முடிவடைந்த பிறகுதான் இதற்கு யார் பொருத்தமாக இருப்பார்களோ அந்த நடிகரை சந்தித்து கதை சொல்லி கால்சீட் கேட்க திட்டமிட்டுள்ளேன். மற்றபடி விஜய்யை வைத்து நான் படம் இயக்க இருப்பதாக வெளிவந்த தகவல்கள் உண்மையில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதனால் விஜய்யின் 68வது படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த செய்தி வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.